அமெரிக்க இராணுவத்தில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 5 வருட காலப்பகுதிக்குள் அதிகளவான படை வீரர்கள் தற்கொலை செய்துள்ளதாக பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் விமானத்தை செலுத்திய 3 விமானிகளும் தற்கொலை செய்துள்ளனர். குறித்த விடயம், அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, லிபியா உட்பட பல நாடுகளில் அமெரிக்க படையினர் நிலை கொண்டுள்ளனர். அதில் பங்கேற்ற படையினர் பலர், தற்கொலை செய்துள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.