இலங்கைக்கு 6ம் தவணை கடனுதவியினை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் வெளியிட்டுள்ளது. முதற்கட்ட பேச்சுவார்த்தைகளில் இவ்விணக்கம் எட்டப்பட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம்செய்த சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் நாட்டை வழமைக்கு கொண்டுவர அரசாங்கம் எடுத்த முயற்சியை அவர்கள் பாராட்டினர். மேலும் வர்த்தக முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அதற்கமைவாகவே சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 6ம் தவணை கடனுதவியை வழங்க தீர்மானித்துள்ளது.