சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கென வேலைத்திட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன. இந்தியா, சீனா, பிரித்தானியா உள்ளிட்ட 12 நாடுகளை கேந்திரமாக கொண்டு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மேம்பாட்டு பணியகம் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதிகளவான சுற்றுலாப்பயணிகளை நாட்டுக்கு வரவழைப்பதே இதன் நோக்கமாகும். இதற்கென ஆயிரத்து 350 பில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் தலைவர் கிசு கோமஸ் தெரிவித்துள்ளார்.