அடுத்துவரும் சகல கிரிக்கெட் தொடர்களையும் பாகிஸ்தானில் நடத்த தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவிக்கிறது. 2009ம் ஆண்டு பாகிஸ்தானில் வைத்து இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பயணித்த பஸ் வண்டியின் மீது மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னர் வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை நிராகரித்து வந்தன. அதற்கமைய ஐக்கிய அரபு இராச்சியத்திலேயே பாகிஸ்தான் சார்பான போட்டிகள் நடைபெற்றுவந்தன. இந்நிலையிலேயே அந்நாட்டு கிரிக்கெட் சபை இத்தீர்மானத்தை அறிவித்துள்ளது.