அனர்த்த நிலை தொடர்பில் அறிவிப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் 2 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர அறிவித்துள்ளார். 011 2587229 மற்றும் 011 2454526 என்ற இலக்கங்கள் ஊடாக விபத்துக்கள் தொடர்பில் அறிவிக்க முடியுமென பொலிஸ் ஊடகப பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை விஷேட பயிற்சிகளைப் பெற்ற பொலிஸ் உயிர்ப்பாதுகாப்பு அனர்த்த நிவாரண அதிகாரிகள் 50 பேரை உள்ளடக்கி 150 பேர் தற்பொழுது காலி, மாத்தறை மற்றும் களுத்துறை பொலிஸ் பிரிவுகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் கடற்பிரிவிற்கு உட்பட்ட 50 வள்ளங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.