பாகிஸ்தானில் நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. 5.8 ரிக்டர் அளவில் நேற்று மாலை இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் 300 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைநதுள்ளதாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த நில நடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலும் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் சில வீதிகளில் பாரிய பிளவுகள் ஏற்பட்டுள்ளதுடன், பாலங்களும் சேதமடைந்துள்ளதாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணியாளர்கள் களத்தில் இறங்கியுள்ள நிலையில், சில இடங்களில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.