நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து தோட்ட வைத்தியசாலைகளளையும் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். பல்வேறு கட்டங்களாக இதனை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த வைத்தியசாலைகள் எதிர்வரும் 5 வருடங்களுக்குள் அனைத்து வசதிகளையும் கொண்ட வைத்தியசாலைகளாக மாற்றப்படுமென அமைச்சர் தெரிவித்தார்.