அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் போம்பியோ சவுதி அரேபியாவுக்கு விஜயம் செய்துள்ளார். சவுதி அரேபியாவின் இரண்டு எண்ணெய் களஞ்சியசாலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து அவர் இவ்விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளமை விசேட அம்சமாகுமென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதலுக்கு பின்னர் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்து சவுதி அரேபிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதேவேளை ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜவாட் ஷரிப் சவுதி அரேபியா மீது மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலானது எதிர்காலத்தில் நாடுகளுக்கு இடையில் யுத்தமாக மாற்றமடையலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.