இந்தியாவின் மும்பை நகரில் ஏற்பட்டுள்ள ஒருவகை துர்நாற்றம் தொடர்பில் விசேட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்று இரவு 10 மணியளவில் துர்நாற்றம் பரவ ஆரம்பித்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. விஷ வாயு கசிவே துர்நாற்றமாக வீசுவதாக சந்தேகிக்கப்படுகிறது. மும்பை நகர் பகுதியிலுள்ள இரசாயன தொழிற்சாலையிலிருந்து வாயு கசிவு ஏற்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது. அதிகாரிகள் உரிய ஆய்வுகளை ஆரம்பித்துள்ளனர்.