ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட விமானத்தாக்குதலில் பொதுமக்கள் 30 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையினர் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதிகளை இலக்காக வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் துரதிஷ்டவசமாக பொதுமக்கள் பலியாகியுள்ளதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலின் போதே பொதுமக்கள் சிக்குண்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.