இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்துவீச்சு சட்ட விரோதமான என மீண்டும் சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இதனால் அகில தனஞ்சயவிற்கு ஒரு வருடத்திற்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி வரையில் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.