நாட்டில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கென 150 கோடி ரூபாவை முதலீடு செய்ய இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. ஐரோப்பிய சந்தை தொடர்பில் இதன் போது கூடுதல் கவனம் செலுத்தப்படுமென அதிகார சபை அறிவித்துள்ளது.
இதேவேளை, இலவச விசா முறை நடைமுறையில் உள்ள நிலையில், இந்தியாவிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கையின் சுற்றுலா ஊக்குவிப்பு அதிகாரசபையின் தலைவர் கிஷூ கோமஸ் தெரிவித்துள்ளார்.