காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தரணகொல்லேவ குளக்கட்டு பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் பலத்த காயமடைந்த நபர் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போதே குறித்த நபர் யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.