போலி மாணிக்க கல் விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பமுனாகல பிரதேசத்தில் சுரங்கமொன்றில் கிடைக்கப்பெற்றதாக தெரிவித்து மாணிக்க கல்லை விற்பனை செய்ய முயற்சித்தவர்கள் தொடர்பில் குருநாகல் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதற்கமைய நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது பல்வேறு நிறங்களைக் கொண்ட பிளாஸ்டிக் துண்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளையடுத்து ஏனைய இரு சந்தேக நபர்களும் கைதாகியுள்ளனர். அவர்களை இன்றைய தினம் குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.