உடற்தகுதி குறித்து முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் தனக்கு எதிரான செயற்பாடகவே கருதுவதாக இலங்கை அணி வீரர் அஞ்சலோ மெத்யுஸ் தெரிவித்துள்ளார். அணியில் இணைத்துக்கொள்வதை தவிர்ப்பதற்காக பல குற்றச்சாட்டுக்கள் தனக்கு முன்வைத்திருப்பதாக அஞ்சலோ மெத்யுஸ் ஊடக சந்திப்பொன்றின் போது தெரிவித்தார். நியுசிலாந்து அணிக்கெரிரான 20 – 20 தொடரிலிருந்தும் அவர் நீக்கப்பட்டிருந்தார். இதுதொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.