அரச நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களின் பிரச்சினைதொடர்பில், அடுத்த வாரம் விசேட பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படுமென உயர்கல்வி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார். இந்நிலையில் பல்கலைக்கழக கல்வி ஊழியர்களின் சம்பள முரண்பாடுதொடர்பில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று நிதியமைச்சில் இன்று இடம்பெறவுள்ளதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.