ஆசியாவின் மிகப்பெரிய கோபுரமாக நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் தாமரை கோபுரம் இன்று மக்கள் உரிமைக்கு வழங்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நிகழ்வு இடம்பெறவுள்ளது. 350 மீற்றர் உயரம் கொண்ட இக்கோபுரம் 17 மாடிகளைக் கொண்டது. சீன அரசாங்கத்தின் 80 வீத நன்கொடை நிதியின் ஊடாக 104 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் தாமரை கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
நட்சத்திர விடுதி, ஹோட்டல்கள், கேட்போர் கூடம், மாநாட்டு மண்டபம் உள்ளிட்ட பல வசதிகள் தாமரைக் கோபுரத்தில் காணப்படுகின்றன. தாமரைக் கோபுரத்தின் திறப்புவிழாவை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரையை வெளியிட இலங்கை தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. 45 ரூபா பெறுமதியான முத்திரை, நினைவுப் பத்திரம் மற்றும் கடித உறை ஆகியன நாளைய தினம் வெளியிடப்படவுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.