இலங்கைக்கு எதிரான தொடரை நடத்துவதற்கு வேறொரு இடம் தெரிவுசெய்யப்படமாட்டாதென பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக இலங்கை அணி பாகிஸ்தானில் விளையாடுவது சாத்தியமற்றதென அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான தமது திட்டத்தை மறு பரிசீலனை செய்யவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்தது. எனினும் தமது நாட்டு நிலைமையை துல்லியமாக அவதானித்துவரும் நிலையில் தொடரை நடாத்த முடியுமென பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்தது.
நடுநிலையான இடமொன்றில் தொடரை நடத்துவது சாத்தியமற்றதென பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை பாதுகாப்பு காரணங்களுக்காக குறித்த தொடரிலிருந்து விலகுவதாக இலங்கை அணி வீரர்கள் 10 பேர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.