வட்டவல லிப்டென் தோட்டத்தில் காணாமல்போயிருந்த மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தோட்டத்திலுள்ள கைவிடப்பட்ட கிணற்றிலிருந்து அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஹட்டன் பதில் மாவட்ட நீதவான் சஞ்ஜீவ பொன்சேகா முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டது. நேற்றையதினம் கொழும்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் வழங்கிய தகவலுக்கமைய சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது பாட்டியை தனது தந்தையும் தாயும் சகோதரரும் தடியால் தாக்கி பையொன்றில் எடுத்துச்சென்றதாக பேரன் பொலிஸில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். முச்சக்கரவண்டியொன்றின் மூலம் சடலத்தை எடுத்துச்சென்றுள்ளனர். பொலிஸ் மோப்பநாயின் உதவியுடன் விசேட தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போதே 83 வயதான மூதாட்டியின் சடலம் கைவிடப்பட்ட கிணற்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.