தெற்காசிய விளையாட்டு விழா போட்டி வரலாற்றில் இலங்கை சார்பாக பளுதூக்கல் போட்டியில் பங்கேற்கவுள்ள முதல் தமிழ் வீராங்கனையாக விஜயபாஸ்கர் ஆர்ஷிகா இடம்பெறவுள்ளளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் நேபாளத்தில் தெற்காசிய விளையாட்டு விழா ஆரமமாகவுள்ளது. யாழப்பாணத்தைச் சேர்த இவர் தனது 13 ஆவது வயதில் பளு தூக்கல் விளையாட்டை ஆரம்பித்தார். இவருக்கு தந்தையே பயிற்றுநராக செயற்பட்டு வருகின்றார்.
2014 ஆம் ஆண்டில் தனது 13 ஆவது வயதில் பாடசாலை மட்ட பளு தூக்கல் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற ஆர்ஷிகா அன்று முதல் பாடசாலை மட்ட சகல போட்டிகளிலும் தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார். கனிஷ்ட பிரிவில் 2014 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை 4 தங்கப்பதக்கங்களையும் சிரேஷ்ட பிரிவில் 3 வெள்ளிஇ 2 தங்கப்பதக்கங்களையும் ஆர்ஷிகா வென்றுள்ளார். அகில இலங்கை பாடசாலைகள் மட்ட 20 வயதிற்குட்பட்ட மகளிருக்கான பளு தூக்கல் போட்டிகளில் மூன்று தேசிய சாதனைகளுடன் வெற்றியீட்டியவர். இப்படி பல சாதனைகளை ஆர்ஷிகா படைத்துவருகிறார்.