கழிவு தேயிலையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபரிடம் இருந்து சுமார் 18 ஆயிரம் கிலோ கிராம் கழிவு தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது.
வத்தளை பொலிஸ் பிரிவிட்குட்பட்ட ஸ்ரீ விக்ரம பிரதேசத்தில் விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். சந்தேகநபர் இன்று (11) வெலிசர மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.