வவுனியா மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இன்று முதல் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதிகாலை 4 மணி முதல் காலை 9 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
தேக்கவத்தை, வைரவ புளியங்குளம், வவுனியா நகர், யாழ். வீதி, இறம்பைக்குளம், குடியிருப்பு, தோணிக்கல், கோவில்குளம், மடுகந்த மற்றும் தெற்கு இலுப்பைக்குளம் உள்ளிட்ட பகுதிகளிலேயே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
தற்போது நிலவும் வறட்சியான வானிலையினால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்து வருவதால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.