மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத் தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வீதி அபிவிருத்திக்கு என கொட்டப்பட்ட கிரவல் மண்ணில் இருந்து சந்தேகத்திற்கு இடமான கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீதி அமைப்பதற்காக செட்டிகுளம் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட குறித்த கிரவல் வகை மண்ணில் இருந்தே கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.