என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டத்தின் மூன்றாவது கண்காட்சி நாளை மறுதினம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்சமயம் இடம்பெற்றுவருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ன இவ்வாறு தெரிவித்துள்ளார். இதற்கமைய இம்முறை கண்காட்சியின் மூலம் பத்தாயிரம் தொழில்முயற்சியாளர்களை உருவாக்க எதிர்ப்பார்த்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இதுவரை என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக 55 ஆயிரம் தொழில்முயற்சிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதற்கென அரசாங்கம் 90 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.