களனிவெளி மார்க்கத்தின் ஊடான ரயில் சேவை தாமதமடைந்துள்ளது. பாதுக்கையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலொன்று வட்டரெக்க பகுதியில் தொழிநுட்ப கோளாறுக்குள்ளாகியுள்ளது. அதனை சீர் செய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
பதுளை – கல்தொட்ட வீதியின் தெஹிகஸ்தலாவ பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். 70 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.