ஒருதொகை கேரள கஞ்சா போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போது முச்சக்கர வண்டியொன்றில் இருந்து கேரள கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. வடக்கு கடற்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து இது தொடர்பான சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர். சோதனை முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் சந்தேக நபர்கள் கேரள கஞ்சா போதைப்பொருளுடன், முச்சக்கர வண்டியை கைவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.