மேலும் இரண்டாயிரம் காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் எட்வட் குணசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பான நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் 9ம் திகதி இடம்பெறும்.
தோட்டப்புர மக்களின் நலன்களுக்கென அரசாங்கம் விரிவுப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார். அதிகளவானோருக்கு தோட்டப்புர வீடுகளுக்கான உறுதிகளும் வழங்கப்பட்டுள்ளன. அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் முக்கிய வாக்குறுதியாக காணி உறுதி வழங்கும் வாக்குறுதி காணப்படுகிறது.
அதற்கமைய இதுவரை 4 இலட்சத்து 50 ஆயிரம் காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் எட்வட் குணசேகர தெரிவித்துள்ளார்.