உடன்படிக்கைகள் இன்றி ஐரோப்பிய சங்கத்தின் உருப்புரிமையிலிருந்து நீங்கும் பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் தோல்வியடைந்தால் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் தேர்தலை நடாத்துவதற்கான பிரேரணையொன்றை சபையில் முன்வைக்க போவதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்ஸன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் வெளியிட்டுள்ள விசேட உரையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று பாராளுமன்றத்தில் பிரக்ஸிட் பிரேரணை தோல்வியடைந்தால் எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி தேர்தலைநடாத்துவதற்கான பிரேரணை முன்வைக்கப்படுமென அவர்தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் தமக்குஇத்தருணத்தில் தேர்தல் ஒன்று தேவையில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரித்தானியாவின் ஆளுங்கட்சியின் மேலும் ஒரு சிலர் அந்நாட்டின் பிரதான எதிர்கட்சியா தொழிpற்கட்சியுடன் இணைந்து எதிர்வரும் 31 ஆம் திகதி பிரித்தானியா ஐரோப்பிய சங்கத்திலிருந்து நீங்குவதற்காக எடுக்கப்பட்ட தீர்மானத்தை நிறுத்துவதற்கான சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு இல்லாவிடில் பிரித்தானிய பிரதமர் பாராளுமன்றத்தை மீண்டும் ஒத்திவைப்பதற்கு நடவடிக்கை எடுப்பார் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன