வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சிப் பாடசாலை பிரதான சிறைச்சாலை அதிகாரியின் கொலை தொடர்பில் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகள் மற்றும் தொலைபேசி உரையாடல் தொடர்பான அறிக்கைகளை மையப்படுத்தி மேற்கொண்ட விசாரணைகள் ஊடாக இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளின் ஊடாக ரி 56 ரக துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் மெகசின் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கொலைக்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதமென தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த ஆயுதத்தை பயன்படுத்திய மற்றொரு சந்தேக நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 3 ம் திகதி அம்பலாங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் குறித்த சிறைச்சாலை அதிகாரியை சுட்டுக்கொன்றமை குறிப்பிடத்தக்கது.