ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 68வது ஆண்டு நிறைவு இன்றையதினம் கொண்டாடப்படவுள்ளது. கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையில் பிற்பகல் 02.00 மணிக்கு கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் வருடப்பூர்த்தியின் பிரதான நிகழ்வு ஆரம்பமாகும். இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் நிகழ்வின்போது அறிவிக்கப்படுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.