அமேசன் காட்டுத் தீயினால் குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதென உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் சுகாதாரப் பிரச்சினைகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக சிரமம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. கடுமையான தீயால் பாதிக்கப்பட்ட இடங்களில் மாசு கலந்த காற்று அதிகநாட்டுகளுக்கு இருக்குமென சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை தீயால் நீண்டகால சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியம் குறைவாக காணப்படுவதாக சூழலியலாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.