கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இடம்பெறும் பாடசாலைகளை தவிர்ந்த ஏனைய சகல அரச பாடசாலைகளும் மூன்றாம் தவணைக்காக நாளைய தினம் திறக்கப்படவுள்ளன. உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் 11 பாடசாலைகளில் இடம்பெறுகின்றன. குறித்த பாடசாலைகள் மாத்திரம் எதிர்வரும் 16ம் திகதி மூன்றாம் தவணைக்காக திறக்கப்படுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.