காஷ்மீரில் பொது மக்கள் மீது இந்திய பாதுகாப்பு பிரிவு தாக்குதல் நடாத்துவதாகவும் துன்புறுத்தல்களை மேற்கொள்வதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. ஒரு சிலர் மீது தடிகளாலும் வயர்களினாலும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஒரு சில பொது மக்களை மின்சார வயர்களை தொடுமாறும் பணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்டவர்கள் பிபிசி உள்ளிட்ட வெளிநாட்டு ஊடகங்களுக்கு புகைப்படங்களுடன் சாட்சியங்களை வழங்கியுள்ளர். எவ்வாறாயினும் இந்திய இராணுவம் இக்குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரித்துள்ளது.
இதேவேளை அமெரிக்க ராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜம்புகாஷ்மீர் மக்களை பாதித்துள்ள இம்மோதல்கள் குறித்து தான் கூடிய கவனம செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.