புத்தளம் அறுவக்காடு பகுதியில் குப்பை லொறி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஒரு மணியளவில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வனாத்தவில்லு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கடந்த வாரமும் குப்பை எடுத்துச்சென்ற லொறி மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.