சிலாபம் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த மாணவியின் மரணம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நடத்தி நீதிமன்றத்துக்கு அறிவிக்கமாறு றாகம போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு சிலாபம் நீதவான் உத்தரவிட்டார்.
13 நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தனது புதல்வி மருத்துவர்களின் கவனயீனத்தினால் உயிரிழந்ததாக அவரது தாய் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் படி நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது.