போதைப்பொருள் வர்த்தகர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வெள்ளவத்தை மற்றும் வத்தளை பகுதிகளில் வைத்து இவர்கள் கைதாகியுள்ளனர். அதற்கமைய மூன்று கிலோகிராம் போதைப்பொருளுடன் வெள்ளவத்தை பகுதியில் வைத்து ஒருவர் கைதுசெய்யப்பட்டார். அவரை இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை மற்றொரு சந்தேகநபர் அசீஸ் போதைப்பொருள் மற்றும் மருந்து பொருட்களுடன் வத்தளை ஹெந்தலை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டார். குறித்த நபர் போதைப்பொருள் விற்பனை செய்ததனூடாக பெற்றுக்கொண்ட ஒரு இலட்சத்து 24 ஆயிரம் ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபரை இன்று வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.