மேல் மாகாணத்தை மையப்படுத்தி இன்று டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் முதலாம் திகதி அனைத்து பாடசாலைகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு செயற்றிட்டத்தின் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.