வரலாற்றுப் பெருமையும் ஆன்மீக சிறப்பும் கொண்ட நல்லையம்பதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் முருகப் பெருமானின் இரதோற்சவம் இன்று இடம்பெற்றது. நல்லூர் கந்தன் தேரேறி திருவீதி வலம் வரும் அழகைக் காண்பதற்காய், இலட்சக்கணக்கான பக்தர்கள் திருத்தலத்தில் கூடியிருந்தனர். அதிகாலையிலே பூசைகள், அபிஷேகங்கள், வசந்தமண்டபப் பூசை ஆகியன காலக் கிரமமாக முருகப்பெருமானுக்கு நடைபெற்றன. ஆலயத்தின் அசையா மணிகள் ஆறும் ஒருங்கே ஒலிக்க முருகப்பெருமன் தேரேறி வீதியுலா வருகைதந்தார்.