நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 578 வேலைத்திட்டங்கள் நிறைவுக்கு வந்துள்ளதாக யாழ் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. யாழ் மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் கடந்த 23ம் திகதி நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டம் ஆரம்பமானது.
ஜனாதிபதி செயலகம், யாழ் மாவட்ட செயலகம் இணைந்து இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுக்கின்றன. இத்திட்டத்தினூடாக மாவட்ட மக்கள் முன்னெடுக்கும் குடிநீர் பிரச்சினை மற்றும் தொழில் வாய்ப்பு பிரிச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவருவதாக மாவட்ட செயலாளர் என்.வேதநாயகம் தெரிவித்தார்.
இதேவேளை நீர் சுத்திகரிப்பு மத்திய நிலையமொன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இளைஞர்களுக்கு தேவையான நவீன தொழில்நுட்ப மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆலோசனைகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென ஸ்மார்ட் ஸ்ரீலங்கா காரியாலயமொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ் மாவட்டத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படுமென யாழ் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.