படைப்புழுவினால் பகுதியளவில் விளைச்சல் நிலங்களை இழந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு முன்னர் பூரண விளைச்சல் நில இழப்பிற்கு மாத்திரமே நட்டஈடு வழங்கப்பட்டதாக விவசாய காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
எனினும் ஒருசிலர் தமக்கு இழப்பீடு கிடைக்கவில்லையென போலி பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர். படைப்புழுவினால் தமது விளைச்சல் நிலங்களை முழுமையாக இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக விவசாய காப்புறுதி சபையின் பணிப்பாளர் பண்டுக்க வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பகுதியளவில் விளைச்சல் நிலங்களை இழந்தவர்களுக்கென நட்டயீடு வழங்குவதற்கு 589 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் உரிய மதிப்பீட்டு அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும். எந்தவொரு விவசாயிக்கும் அநீதி இழைக்கப்படாது இழப்பீடு வழங்கப்படுமென விவசாய காப்புறுதி சபையின் பணிப்பாளர் பண்டுக்க வீரசிங்க தெரிவித்துள்ளார்.