நைஜீரியாவில் பொக்கோஹாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். தென்கிழக்கு நைகர் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2009ம் ஆண்டு முதல் பொக்கோ ஹாரம் பயங்கரவாதிகள் நைஜீரியாவில் செயற்பட்டுவருகின்றனர். கடந்த சில வாரங்களாக அவர்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இதுவரையான காலப்பகுதியில் பயங்கரவாத செயற்பாடுகளினால் 30 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளதோடு, இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.