G7 மாநாடு பிரான்ஸில் இன்று ஆரம்பமாகிறது. மாநாடு எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரித்தானியா, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். மாநாட்டினை முன்னிட்டு பிரான்ஸின் சில பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கென 13 ஆயிரத்து 200 இற்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பபட்டுள்ளனர். இதேவேளை, ஜி7 மாநாட்டின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.