இணையத்தளத்தை பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடும் நபர்களை அறிந்துகொள்வதற்கான விசேட நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அடையாளம் காணப்பட்ட அவ்வாறான 80 பேருக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் பல பகுதிகளில் இது தொடர்பான சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டபோதே குறித்த 80 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் தங்கியிருந்து மோசடி செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமை தொடர்பில் கண்டறியப்பட்ட நபர்களில் பலர் நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்களென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.