2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறு மீளாய்வு பெறுபேறு இன்று வெளியிடப்பட்டிருப்பதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இது தொடர்பான விவரங்களை திணைக்களத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளமான www.doenets.lk முகவரியில் சரியான பரீட்சை இலக்கத்தை செலுத்தி அறிந்து கொள்ளமுடியும்.
பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாயின் தொலைபேசி இலக்கத்தினூடாக அறிந்து கொள்ள முடியும். பாடசாலை பரீட்சை ஏற்பாடு மற்றும் பெறுபேறு கிளையின் தொலைபேசி இலக்கங்களான 0112784208 / 0112784537 / 0113188350 / 0113140316 / என்னும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவும் 1911 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தினூடாகவும் அறிந்துகொள்ளமுடியும்.