குவைத்தில் துன்புறுத்தல்களுக்குள்ளான இலங்கை பணிப்பெண்கள் 60 பேர் இன்று நாடு திரும்பினர். இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.230 எனும் விமானத்தினூடாக அவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.
பல வருடங்கள் குவைத்தில் பணிபுரிந்த அவர்கள் அங்குள்ள தூதரக காரியாலயத்தில் தஞ்சமடைந்திருந்தனர். அதற்கமைய குறித்த பெண்கள் நாடு திரும்புவதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.