காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல போவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்தியா அண்மையில் காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அந்தஸ்தை நீக்கியது. இதனை தொடர்ந்தே பாகிஸ்தான் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
காஷ்மீர் பிரச்சினை காரணமாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் தொடர்ந்து மோசமான நிலை உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தக மற்றம் இராஜதந்திர உறவுகளை நிறுத்தியது. பாகிஸ்தான தொடர்பில் இந்தியாவின் நடவடிக்கை மனித உரிமை மீறல் என பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்