கொழும்பிலிருந்து அருவக்காடு பகுதிக்கு கழிவுகளை ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புத்தளம் – மன்னார் வீதியில் இன்று அதிகாலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
3 டிப்பர் வாகனங்கள் மீதே கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை இதற்கு முன்னரும் அருவக்காடு பகுதிக்கு குப்பைகளை கொண்டு செல்வதற்கு குறித்த பகுதி மக்கள் பல சந்தர்ப்பங்களில் எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.