ஹொங்கொங்கில் மீண்டும் ஜனநாயக ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சீன அரசாங்கம் விடுத்த கடும் எச்சரிக்கைக்கு மத்தியிலும் மீண்டும் எதிர்ப்பு பேரணிகள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 10 வாரங்களாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது, அதில் கலந்துகொண்டர்களுக்கும் பொலிசாருக்குமிடையில் மோதல் ஏற்ப்பட்டது. எனினும் தற்போது இடம்பெறும் ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஹொங்கொங் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை ஹொங்கொங் அமைதியின்மை குறித்து அமெரிக்காவும் பிரித்தானியாவும் கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.