நாட்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப பயிற்சி நிறுவமான கொரிய இலங்கை தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் நாளை மக்கள் உரிமைக்க வழங்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நிகழ்வு இடம்பெறும்.
ஒருகொடவத்தை முச்சந்தியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள குறித்த தொழிற்பயிற்சி நிறுவனத்தின் நிர்மாணப் பணிகளுக்கென ஒரு கோடியே 15 இலட்சத்து 70 ஆயிரம் அமெரிக்க டொலருக்கும் அதிக நிதி செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறித்த தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில் புதிய கற்பித்தல் கலாசாரமொன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதியமைசசர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ளார். இதனூடாக அதிநவீன தொழில்நுட்ப பாடநெறிகளை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.