5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தோருக்கான புலமை பரிசில் நிதி ஒன்லைன் முறையில் வழங்கப்படவுள்ளது.
5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியெய்தும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த 15 ஆயிரம் பேருக்கும் வருடாந்தம் புலமை பரிசில் கொடுப்பனவு வழங்கப்படுகின்றன. இப்புலமை பரிசில் கொடுப்பனவை முறையாக வழங்குவதற்கு நவீன தொழிற்நுட்பத்தை பயன்படுத்துமாறு அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அண்மையில் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். இ
தன் முதல் கட்ட நடவடிக்கையாக பு;லமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் புள்ளிகள் உள்ளிட்ட விடயங்கள் தற்போது ஒன்லைன் முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாதாந்தம் வவுச்சர்கள் மூலம் பெற்றுக் கொள்ளபபட்ட குறித்த நிதி இம்முறை காரணமாக மாணவர்களின் வங்கி கணக்கில் துரிதமாக வைப்பு செய்யப்படும். தற்போது 500 ரூபா வழங்கப்படும் இந்நிதியை 750 ரூபாவாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.